இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் பொறுப்புணர்வைப் போன்றது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றை நினைவுகூர்ந்த தூதர் சந்தோஷ் ஜா, இலங்கைக்கான உதவிகளை இந்தியா ஒரு ஆழமான கடமையாகவும், குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் பொறுப்பாகவுமே கருதுகிறது என்று குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள புதிய அவசர சிகிச்சை பிரிவு மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு உயர்தர அவசரகால மருத்துவச் சேவைகள் விரைவாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வடக்கு தொடருந்துப் பாதையில் வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய 15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நவீன சமிக்ஞை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
'டிட்வா' (Ditwah) புயலால் சேதமடைந்த மத்திய மாகாணத்திற்கான தொடருந்து இணைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள மூன்று தீவுகளில் கலப்பின புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இது, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பசுமைத் தீவுகள் தொலைநோக்குப் பார்வைக்கு உறுதுணையாக இருக்கும்.
இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்த வான்வழி மற்றும் கடல்சார் பிராந்திய இணைப்புகளை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்தியாவின் "விக்சித் பாரத்" என்ற வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையின் மாற்றத்திற்கான பயணமும் இணைந்து இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தும் என உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நம்பிக்கை வெளியிட்டார்.
Latest News
இங்கிலாந்து மண்ணில் இலங்கை பரிதாபம்: தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்து அதிரடி
Local
20 September 2026
"த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி" - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
Local
19 September 2026
கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு!
Local
19 September 2026
இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானம்
Local
19 September 2026
வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிய 'வட்ஸ்அப்' இலக்கம் அறிமுகம்!
Local
19 September 2026
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு!
Local
19 September 2026
தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!
Local
19 September 2026
அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது: நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா!
Local
19 September 2026
மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரில் இருவரின் உடலங்கள் மீட்பு
Local
19 September 2026
BRICS விவகாரத்தில் இலங்கையின் நகர்வு மந்தமா? பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
Local
19 September 2026