General17 September 2026

ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தை மறுசீரமைத்தல், அதன் செயற்பாடுகளை அதிக திறனுடையதாக மாற்றுதல் மற்றும் அந்த நிறுவனம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தின் புதிய பதில் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் மிஸ்ரா மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போதே இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தை மீண்டும் இலாபமீட்டும் ஒரு வலுவான நிறுவனமாக மாற்றுவதே தங்களது முதன்மை நோக்கம் என வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes