இலங்கையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றவுள்ள அமைதிப்படை பீஸ் கோப்ஸ் என்ற U.S. Peace Corps அமைப்பின் 34 புதிய பயிற்சி தன்னார்வலர்கள், தங்கள் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 'பீஸ் கோர்ஸ்' சேவைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு முன்னதாக, இந்தத் தன்னார்வலர்கள் சிங்களம் அல்லது தமிழ் மொழி, இலங்கை கலாசாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் கற்பித்தல் ஆகியவற்றில் தீவிரப் பயிற்சியை மேற்கொள்வார்கள்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இவர்கள் வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் பணியாற்றுவார்கள் அங்குள்ள இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து அமெரிக்க ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள்.
அத்துடன், அவர்கள் இலங்கைக் குடும்பங்களுடன் தங்கி, தாங்கள் பணியாற்றும் சமூகங்களின் ஒரு பகுதியாகத் திகழ்வார்கள்.
கொழும்பில் உள்ள 'பீஸ் கோர்ஸ்' அலுவலகத்தில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) இந்தப் புதிய பயிற்சியாளர்களை வரவேற்றார்.
இலங்கையில் 'பீஸ் கோர்ஸ்' சேவையானது 1962-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் முதல் அமெரிக்கத் தன்னார்வலர்கள் இங்கு வருகை தந்தனர்.
கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக மேம்பாடு மற்றும் சுனாமிக்குப் பிந்திய மீள்குடியேற்றப் பணிகள் ஆகியவற்றில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த நாட்டில் பணியாற்றியுள்ளனர்.
ஆங்கில மொழி கல்வியின் மீது புதிய கவனத்தைச் செலுத்தி, 2018 ஆம் ஆண்டில் இந்த திட்டம் முறையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்க அமைதிப்படை (U.S. Peace Corps) என்பது அமெரிக்க அரசின் ஒரு சுயாதீனமான அமைப்பாகும்.
இது உலகெங்கிலும் உள்ள வளரும் நாடுகளுக்கு உதவவும், அமெரிக்க மக்களுக்கும் அந்த நாடுகளின் மக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தவும் செயல்படுகிறது.
Latest News
கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு!
Local
19 September 2026
இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானம்
Local
19 September 2026
வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிய 'வட்ஸ்அப்' இலக்கம் அறிமுகம்!
Local
19 September 2026
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு!
Local
19 September 2026
தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!
Local
19 September 2026
அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது: நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா!
Local
19 September 2026
மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரில் இருவரின் உடலங்கள் மீட்பு
Local
19 September 2026
BRICS விவகாரத்தில் இலங்கையின் நகர்வு மந்தமா? பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
Local
19 September 2026
இஸ்லாமியப் புரட்சியும் அமெரிக்கப் பகையும் -'சூரியனின் விழுதுகளில் சிறப்பு அலசல்!
Local
19 September 2026
கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் மாயம்
Local
19 September 2026