General19 September 2026

ஷா மன்னர் பரம்பரை மீண்டும் ஈரானைக் கைப்பற்றுமா? மேற்கத்திய நாடுகளின் திட்டம் குறித்து விரிவுரையாளர் கணிப்பு!

ஈரானில் தற்போதைய ஆட்சி வீழ்ச்சியடைந்தால், முன்னாள் ஷா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை அந்தநாட்டின் அடுத்த தலைவராக முன்னிறுத்துவதற்கு மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கக்கூடும் என பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில், மதச்சார்பற்ற அரசியல் நிலைப்பாட்டை முன்னிறுத்தி வரும் முன்னாள் ஷா பரம்பரையின் வாரிசுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவளிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், அவ்வாறு புதிய ஆட்சி ஒன்று அமைந்தால், இஸ்ரேலுடன் மீண்டும் தூதரக உறவுகளை ஏற்படுத்தி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக ஷா பரம்பரையின் வாரிசு ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகவும் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியின் முழு காணொளியை காண Sooriyan FM News என்ற யூட்யூப் தளத்தை பார்வையிடவும்
Related recommendation
Hiru TV News | Programmes