General19 September 2026

நானுஓயாவில் வாகன விபத்தில் 34 வயதான பெண் உயிரிழப்பு!

நானுஓயாவில் இன்று (19) காலை இடம்பெற்ற வாகன வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண், தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி உந்துருளியில் (ஸ்கூட்டி) பயணித்துக் கொண்டிருந்தபோது, கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் நுவரெலியா நோக்கிப் பயணித்த சிற்றூர்தி ஒன்று, மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில், உந்துருளியில் பயணித்த பெண் பலத்த காயமடைந்த நிலையில், நுவரெலியா பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் 42 வயதான சிற்றூர்தி சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes