அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற 30 மீனவர்கள் நேற்று ராமேஸ்வரம் சென்றடைந்தனர்.
குறித்த மீனவர்களின் உறவினர்கள் அவர்களை ராமேஸ்வரம் இறங்குதுறையில் சென்று வரவேற்றுள்ளனர்.
தனுஷ்கோடி - தலைமன்னார் கடலில் கடந்தமாதம் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டனர்.
4 முறை மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது.
அவர்களை விடுவிக்க ராமேஸ்வரத்தில் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் மன்னார் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளை அடுத்து 30 பேரையும், 5 படகுகளையும் விடுவித்து மன்னார் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
இதனிடையே, ஏற்கனவே கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்ளை விடுவிக்க வலியுறுத்தி இன்று தொடரூந்து மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் கைதாவதற்கு முன்தினம் சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் மீது சட்டநடவடிக்கை இடம்பெறவில்லை.
அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி காரைக்கால் பகுதி மீனவர்கள் கடந்த 7-ம் திகதி முதல் தொடர் பணிநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Latest News
பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறி, அதைவிடப் படுமோசமான PSTA சட்ட வரைவைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி!
Local
13 June 2026
மண்சரிவு அபாயம்: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Local
13 June 2026
சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ: இணையத்தில் தீயாய் பரவும் காணொளி !
Local
13 June 2026
நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த பிற அமைப்புகளுக்கு தடை
Local
13 June 2026
இந்திய வானூர்தி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு
Local
13 June 2026
மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்!
Local
13 June 2026
பருத்தித்துறையில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு
Local
13 June 2026
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!
Local
13 June 2026
சுரேஷ் சலேயின் கைதால் புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடையப்போவதில்லை
Local
13 June 2026
இந்திய வான்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026