General24 May 2013

அரசாட்சிக்கு பௌத்த கொள்கை

பௌத்தக் கொள்கைகளின்படி இயங்கும் அரசாங்கத்தின் ஊடாக, சமாதானமான நாட்டை கட்டியெழுப்ப தாம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நல்லாட்சிக்கு, பௌத்த கொள்கைகள் உறுதுணை புரிகின்றன.

அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்த வெசாக் பூரணை தினம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

இதேவேளை, இலங்கையில் மக்கள் சிக்கலான சூழ்நிலையை அனுபவித்து வருகின்ற நிலையில், இந்த ஆண்டு வெசாக் போயதினம் வந்திருப்பதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் அதிக நெருக்கடி நிலையை அனுபவிக்கின்றனர்.

வெசாக் போய தினத்திலேனும், அரசாங்கம் கௌத்தம புத்தரின் போதனைகளை நன்கு கேட்டால், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் இன்றை வெசாக் போயதினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தரின் போதனை அடிப்படையில் வன்முறையற்ற சமூக கட்டமைப்பு, முன்னெப்போதும் இல்லாதவாறு, தற்போது அவசியப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes