Entertainment29 July 2026

தனுஷின் 'ஓம்' படப் பாடலில் அரசியல்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வரிகள்!

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியான 'ஓம்' திரைப்படத்தின் முதல் பாடலான 'அலகா லூவா' பாடலின் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த பாடல் ஒரு துள்ளலிசைக் 'குத்து' பாடலாகும்.

சாய் அபியங்கர் இசையமைத்துப் பாடியுள்ள இந்த பாடலுக்கு, பிரான்சிஸ் மற்றும் கட்டாகா கோரல் குழுவினர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பாடலின் வரிகள் வெறும் திரைப்படத்திற்கான பாடலா அல்லது அரசியல் நோக்கத்துடன் எழுதப்பட்டதா என்ற கேள்வியை இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

'அலகா லூவா' பாடலில் இடம்பெற்றுள்ள, "கத்துபவர்கள் கைகளை உயர்த்த வேண்டும், உத்தரவிட்டால் நசுக்கப்பட வேண்டும்... சத்தமில்லாமல் அது நடக்க வேண்டும், நாம் விட்டதைத் தொடாமல் நாம் வெல்ல வேண்டும்" உள்ளிட்ட அதிரடியான வரிகள் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes