இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழும் காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
தற்போது, அவரது நடிப்பில் ‘இராமாயணா’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதில், இராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நடிகர் பாலகிருஷ்ணாவின் 111ஆவது திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது படப்பிடிப்பு அனுபவம் தொடர்பாக காஜல் அகர்வால் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவர் தனது அனுமதியின்றி கேரவனுக்குள் நுழைந்ததாகவும், பின்னர் தனது உடலில் நடிகையின் பெயரைப் பச்சை குத்தியிருப்பதைக் காட்டியதாகவும், அதை பார்த்ததும் நடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட காஜல் அகர்வால், தனிப்பட்ட எல்லைகளை மதிக்காத இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்ததுடன், குறித்த நபரை எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.
திரைத்துறையில் பணியிடப் பாதுகாப்பு, தனிப்பட்ட மரியாதை மற்றும் தொழில்முறை ஒழுக்கம் ஆகியவை மிகவும் முக்கியமானவை என்பதையும் அவரது கருத்து மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தற்போது, அவரது நடிப்பில் ‘இராமாயணா’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதில், இராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நடிகர் பாலகிருஷ்ணாவின் 111ஆவது திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது படப்பிடிப்பு அனுபவம் தொடர்பாக காஜல் அகர்வால் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவர் தனது அனுமதியின்றி கேரவனுக்குள் நுழைந்ததாகவும், பின்னர் தனது உடலில் நடிகையின் பெயரைப் பச்சை குத்தியிருப்பதைக் காட்டியதாகவும், அதை பார்த்ததும் நடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட காஜல் அகர்வால், தனிப்பட்ட எல்லைகளை மதிக்காத இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்ததுடன், குறித்த நபரை எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.
திரைத்துறையில் பணியிடப் பாதுகாப்பு, தனிப்பட்ட மரியாதை மற்றும் தொழில்முறை ஒழுக்கம் ஆகியவை மிகவும் முக்கியமானவை என்பதையும் அவரது கருத்து மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
Local
03 August 2026
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026
மேட்டூருக்கு பாயும் காவிரி நீர் : முதலமைச்சர் விஜய் "கடவுளின் குழந்தை..." - உற்சாகத்தில் பொதுமக்கள்!
Local
03 August 2026