Entertainment31 July 2026

"30 வருஷமா முயற்சித்தும் முடியவில்லை..." பிரதமர் மோடியிடம் சுந்தர் சி பற்றி குஷ்பு சொன்ன சுவாரஸ்ய உண்மை!

இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியரின் மகளின் திருமணம் கடந்த ஜூன் 25-ஆம் திகதி கோவாவில் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்திற்காகப் பிரதமர் மோடியைக் குஷ்புவின் குடும்பத்தினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியது குறித்து நடிகை குஷ்பு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

"பிரதமர் மோடி எங்களிடம் ஒரு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே பேசுவார் என நினைத்தோம். ஆனால், அந்தச் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. எனது கணவர் சுந்தர் சி, எனது மகள் அவந்திகா மற்றும் மருமகன் ஷ்ரவன் ஆகியோரிடம் பிரதமர் மோடி முதலில் 'உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?' என்றுதான் கேட்டார். ஷ்ரவன் கொஞ்சம் தடுமாறி இந்தியில் பேசினார்; சுந்தர் சிக்கு ஹிந்தி தெரியவில்லை.

'தமிழ்நாட்டில் ஹிந்தி வேண்டாம் என்று சொன்னதால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்; தெரியாமல் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்' என்று சுந்தர் சி பிரதமர் மோடியிடம் கூறினார்.

உடனே, 'என்னைப் பார்த்தாவது நீங்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கலாமே?' எனப் பிரதமர் என்னிடம் கேட்க, '30 வருடங்களாக முயற்சித்தும் முடியவில்லை' எனக் கூறினேன்.

எனது மகளுக்கு ஹிந்தி தெரியும்; பள்ளியில் அவளது இரண்டாவது மொழி இந்திதான். அதை அவள் பிரதமரிடம் கூறியதும், 'மிகவும் நன்று. நீங்கள் உங்கள் அப்பாவுக்கும் கணவருக்கும் ஹிந்தி சொல்லிக் கொடுங்கள்' என்று கூறிய பிரதமர், கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்றும் மணமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்" என அந்தச் சந்திப்பில் நடந்தவை குறித்துக் குஷ்பு விவரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes