Entertainment03 August 2026

மதுரையில் முதன்முறையாகத் த்ரிஷா நற்பணி மன்றம் ஆரம்பம்

தமிழ்நாட்டின் மதுரையில் முதன்முறையாகத் த்ரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சுவரொட்டியில், "தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா த்ரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்.

தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகை த்ரிஷா தேர்தல் களத்தில் இறங்க வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் அரசியல் வதந்திகளுக்கு மத்தியில், அவரை வரவேற்கும் விதமாக அவரது ரசிகர்கள் இந்த நற்பணி மன்றத்தைத் தொடங்கி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes