Entertainment15 August 2026

"மனம் நிறைந்துள்ளது..." – ரசிகர்களின் பெரும் வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!

பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் அமோக வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நெகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும், அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகின்றன.

"'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துக்கும், அதன் பாடல்களுக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"பொதுமக்களின் அளப்பரிய அன்பாலும் ஆதரவாலும் என் மனம் நிறைந்துள்ளது" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

படம் வெளியானதில் இருந்தே தனது தொலைப்பேசி முழுவதும் சாதகமான (Positive) தகவல்களால் மட்டுமே நிரம்பி வழிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

திரைப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மீண்டும் ஒருமுறை ஜி.வி.பிரகாஷின் இசை மாயாஜாலத்தை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes