சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார்.
'பைசன்' படத் தயாரிப்பின் போது, உடன் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து துருவ் விக்ரம் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனுபமா, தான் கடந்த காலத்தில் ஒருவரிடம் சந்தித்த மனரீதியான பாதிப்புகள் குறித்துப் பேசியிருந்தார்.
அதில் அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடாத போதிலும், சமூக வலைதளங்களில் துருவ் விக்ரம் குறித்தே பல்வேறு ஊகங்களும் விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், 'இந்தியா டுடே' (India Today) வட்டமேசை நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய துருவ் விக்ரம், இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துத் தெரிவித்துள்ளார்.
"சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் இந்த அதிகப்படியான கவனம் என்னைப் பாதிக்கவே இல்லை என்று கூறினால் அது உண்மையல்ல. ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் யார்த்தத்துடன் இணைந்திருப்பதும், நமது உண்மையான அடையாளம் மற்றும் மதிப்பீடுகளைப் புரிந்துகொண்டிருப்பதும் மிக முக்கியம்.
நாம் நேசிக்கும் மனிதர்களையும், நமது வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கும் விஷயங்களையும் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும். நாம் உண்மையின் பக்கம் நின்று, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் போது, வெளியிலிருந்து வரும் விமர்சனங்களும் ஊகங்களும் நம்மைப் பாதிப்பது குறையும்" எனத் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் தனக்கான ஒரு தனி உலகத்தைப் படைத்துக் கொண்டு, "தனி ஒரு படை" போலச் செயல்படப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும், பொதுவெளிச் சத்தங்களில் இருந்து விலகித் தன் அமைதியைப் பாதுகாப்பதே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது சமூக வலைதளப் பயன்பாடு குறித்துப் பேசிய அவர், திரைப்பட விளம்பர காலங்களைத் தவிர்த்துப் பிற நேரங்களில் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்து விலகியிருப்பதாகவும், புத்தகங்கள் வாசிப்பது, இசை கேட்பது மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலேயே தான் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்
Local
19 August 2026
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்
Local
19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!
Local
19 August 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழப்பு
Local
19 August 2026
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026