அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசனப்பட்டி அணியும் வசதி இல்லாத பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
அதற்கமைய, செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்திருப்பது அவசியமாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறை மிகக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை,அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் பயணிகளிடம் இருந்தும் தண்டப்பணத்தை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசனப்பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்காலம் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக அமுல்படுத்தப்படுகிறது.
சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணியாததால் ஏற்படும் வீதி விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆசனப்பட்டி அணியும் வசதி இல்லாத பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
அதற்கமைய, செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்திருப்பது அவசியமாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறை மிகக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை,அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் பயணிகளிடம் இருந்தும் தண்டப்பணத்தை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசனப்பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்காலம் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக அமுல்படுத்தப்படுகிறது.
சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணியாததால் ஏற்படும் வீதி விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Latest News
இலங்கையின் தில்ஹானி மற்றும் ஷானிகா பதக்கங்களை வென்று சாதனை!
Local
22 August 2026
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்!
Local
22 August 2026
நீதி அமைச்சர் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் - தினன தகுண கண்டனம்!
Local
22 August 2026
வடக்கு - கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு!
Local
22 August 2026
மைதானத்தில் ஸ்டார்கை நேர்காணல் செய்த மனைவி!
Local
22 August 2026
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு
Local
22 August 2026
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026