Entertainment26 August 2026

டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொக்ஸிக்’ திரைப்படம் இன்று(26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் , 'டொக்ஸிக்' படக்குழுவினர் இரசிகர்களுக்கு சில முக்கியமான கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

A Fairy Tale for Grown-Ups என்பது வெறும் திரைப்படமன்று, இது பல ஆண்டுகளாக , காட்சி காட்சியாக, தேர்வு தேர்வாகக் கட்டியெழுப்பப்பட்ட உலகமாகும்.

இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர், நடிகர் மற்றும் பணியாளர்களின் நோக்கம், இரசிகர்களும் இதே போன்ற கூட்டு அனுபவத்தைப் பெரிய திரையில் பெற வேண்டும் என்பதே ஆகும்.

திரையரங்குகளில் படம் பார்க்கும்போது காட்சிகளையும் காணொளிகளையும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என படக்குழு வலியுறுத்துகிறது.

படத்தின் கதையமைப்பை முன்கூட்டியே வெளிப்படுத்துவதோ அல்லது படத்தின் காட்சிகளை பரப்பி மற்றவர்களின் திரையரங்க அனுபவத்தைக் கெடுப்பதோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த படத்தை பெரிய திரையில் முழுமையாக அனுபவித்து ரசிக்க வேண்டும் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes