உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அரசியல் சார்ந்த பதிவு, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புக்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பதிவில், “கணவனைத் தேடும் மனைவியைப் பற்றிய கதை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்ற உதயநிதி ஸ்டாலினின் கருத்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இன்பநிதியின் இந்தப் பதிவு அரசியல் நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.
அதேவேளை, இந்த நடவடிக்கை அவரது எதிர்கால அரசியல் ஈடுபாட்டுக்கான ஆரம்ப சமிக்ஞையாக இருக்கக்கூடும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் அடுத்த தலைமுறை உருவாக்கம் தொடர்பான ஊகங்களுக்கு வலுசேர்த்துள்ளதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும், இன்பநிதியின் அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.








