International01 May 2026

ஐக்கிய இராச்சியத்தின் கடுமையான தீவிரவாத அச்சுறுத்தல் நிலை?

ஐக்கிய இராச்சியத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் நிலை "கடுமையானது" என்று உயர்த்தப்பட்டுள்ளது.
 
அதாவது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என்பதையே இது காட்டுகிறது.

நேற்று புதன்கிழமையன்று கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூதர்கள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் சம்பவத்தை காவல்துறை ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரணை நடத்தி வருகிறது.

பிபிசி தகவலின்படி, சந்தேக நபர் தென்கிழக்கு லண்டனைச் சேர்ந்த 45 வயதான எஸா சுலைமான் ஆவார்.

இவர் 1990களின் முற்பகுதியில் சோமாலியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes