இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அங்கு பணிபுரியும் நிரந்தர, தற்காலிகத் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, நாட்டில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் மொத்தம் 398 தோட்டங்கள் காணப்படுவதுடன், அவற்றில் சுமார் 95,000 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இந்த விபரங்களை வெளியிட்டார்.
தனியார்மயமாக்கப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் 398 தோட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை குத்தகைக்கு கொடுத்துள்ள 204 தோட்டங்களும், அரசுப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் குத்தகைக்கு கொடுத்துள்ள 194 தோட்டங்களும் அடங்கும்.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய 3 அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்கள் மொத்தம் 32 தோட்டங்களை நிர்வகிக்கின்றன.
அரசுப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் நேரடியாக 16 தோட்டங்களையும், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை நேரடியாக 17 தோட்டங்களையும் தங்கள் நிர்வாகத்தின் கீழ் வைத்துள்ளன.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களில் 76,044 நிரந்தரத் தொழிலாளர்களும், 18,955 தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை 2,738 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
அரசுப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்; 1,524 நிரந்தரத் தொழிலாளர்களையும், 573 தற்காலிகத் தொழிலாளர்களையும் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026
பதுளை கிலென்பீல்ட் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்
Local
10 June 2026
முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
அரசாங்கத்தின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியீடு
Local
10 June 2026
முதலிடத்திற்கு முன்னேறிய ஹரி புரூக் - ஐசிசி தரவரிசையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
2030ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி
Local
10 June 2026
இந்திய குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்திப்பு
Local
10 June 2026
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
Local
10 June 2026
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு
Local
10 June 2026
ஹஜ் யாத்திரையில் அடிப்படை வசதிகள் இல்லை – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டு
Local
10 June 2026