ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு கல்கிசை நீதவான் காஞ்சனா என். சில்வா இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் காணப்படுவதால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு துமிந்த திஸாநாயக்கவிற்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (19) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய நேரடி மற்றும் சூழ்நிலைச் சாட்சியங்கள் போதியளவு இல்லாமையினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி அன்றைய கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டிருந்தார்.
ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர், அவரது தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், தற்பொழுது புதிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் காணப்படுவதால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு துமிந்த திஸாநாயக்கவிற்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (19) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய நேரடி மற்றும் சூழ்நிலைச் சாட்சியங்கள் போதியளவு இல்லாமையினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி அன்றைய கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டிருந்தார்.
ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர், அவரது தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், தற்பொழுது புதிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
Latest News
நீதி அமைச்சர் விஜயம் செய்த நாளில் செம்மணியில் மேலும் 7 என்புக்கூடுகள்!
Local
19 June 2026
துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!
Local
19 June 2026
பசிலுக்கான பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!
Local
19 June 2026
இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி
Local
19 June 2026
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மோதல்: 4 காவல்துறையினர் காயம், நால்வர் கைது
Local
19 June 2026
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுப்பு
Local
19 June 2026
பசி, இருள், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பதிலை வழங்குவார்கள்! – ஹெக்டர் அப்புஹாமி எச்சரிக்கை
Local
19 June 2026
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!
Local
19 June 2026
சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்
Local
19 June 2026
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
Local
19 June 2026