General19 June 2026

நீதி அமைச்சர் விஜயம் செய்த நாளில் செம்மணியில் மேலும் 7 என்புக்கூடுகள்!

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 29ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நடைபெற்ற போதே இந்த விசேட விஜயம் இடம்பெற்றது.

அமைச்சரின் இந்த விஜயத்தின் பின்னணியில் இன்றைய அகழ்வுப் பணிகளும் தொடர்ந்தன.

இதன்போது, இன்றைய தினம் மாத்திரம் மேலும் 3 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டன.

அதனடிப்படையில், செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுப் பணிகளின் போது 394 என்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளன.

அவற்றில் 370 என்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related recommendation
Hiru TV News | Programmes