General26 June 2026

ஹஜ் யாத்திரியர்கள் அவதி குறித்த குற்றச்சாட்டு: சுயாதீன விசாரணைக் குழு அமைக்க கோரிக்கை

ஹஜ் யாத்திரியர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
ஹஜ் யாத்திரியர்கள் எந்தவிதமான பிழைகளும் குறைகளும் ஏற்படவில்லை என்றும், ஹஜ் குழு அறிக்கை திருப்திகரமாக இருப்பதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், மினா மற்றும் முஸ்தலிபா பகுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஹஜ் பயணிகள், அடிப்படை வசதிகள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சுத்திகரிப்பு நிலையங்கள், உணவு மற்றும் தேநீர் விநியோகத்திற்காக பயணிகள் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
 
பாதிக்கப்பட்ட பயணிகள், தங்களின் அவல நிலையை சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையாகப் பகிர்ந்துள்ளனர்.
 
வானூர்தி நிலையங்களில் இருந்தபோதும் யாத்திரியர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிகள் மற்றும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
 
ஹஜ் குழுவின் அறிக்கையை மட்டும் நம்பாமல், இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய ஹஜ் குழுவிற்கு வெளியே உள்ள உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சுயாதீனமான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் . அரசாங்கம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 
Related recommendation
Hiru TV News | Programmes