General26 June 2026

போதைப்பொருள் கடத்தல் ‘காட்ஃபாதர்’களின் தற்போதைய தலைமுறை நாமல் ராஜபக்ச - பிரதி அமைச்சர் மஹிந்த

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 'காட்ஃபாதர்'களின் தற்போதைய தலைமுறை நாமல் ராஜபக்ச என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது உரையின் போது நாடாளுமன்ற சபையில் இல்லாதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்த பிரதி அமைச்சர், போதைப்பொருள் கடத்தல் காட்ஃபாதர்களின் தற்போதைய இணைப்பு அன்றைய தினம் சபையில் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் எனக் குறிப்பிட்டார்.

கிரிஷ் வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்ததாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சபைக்கு வரவில்லை என்று கூறிய பிரதி அமைச்சர், நீதிமன்ற வழக்குத் தவணைகள் வரும்போது சில தரப்பினர் பதற்றமடைவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் வழங்கப்படும் அறிவுரைகள் குறித்தும் பிரதி அமைச்சர் இங்கு கருத்து வெளியிட்டார்:

" அரசாங்கத்தைப் பற்றி பல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அவர் வழங்குகிறார், அதற்கு நன்றி. ஆனால், அந்த அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நாங்கள் இன்னும் தள்ளப்படவில்லை."என அமைச்சர் மேலும் தெரிவித்தார் .
Related recommendation
Hiru TV News | Programmes