General26 June 2026

போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம்: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது!

குற்றவாளி ஒருவருக்கு போலி கடவுச்சீட்டொன்றைத் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கண்டியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes