General27 June 2026

கல்முனையில் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சி: சந்தேக நபருக்கு விளக்கமறியல் !

அம்பாறை, கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், கடமையிலிருந்த காவல்துறையினரை அச்சுறுத்தி அவர்களது துப்பாக்கியைப் பறிக்க முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மதுபோதையில் மனைவியை தாக்கியுள்ளார். இந்த நிலையில் மனைவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதன் போது சந்தேக நபர் காவல்துறையினரின் துப்பாக்கியை அவர்களிடமிருந்து பறித்து குழப்பம் விளைவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலதிக காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன்,
துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது காயமடைந்த காவல்துறையினர் சிகிச்சைக்காக கல்முனை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரி சூரியன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மீது, காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பிலான குற்றஞ்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேக நபருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை காவல்துறை பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes