General04 July 2026

வரி வலையில் சிக்கும் பங்குச் சந்தை வருமானம்? எதிர்கால மாற்றம் குறித்து தகவல்

இலங்கையின் வரி விதிப்புக் கொள்கைகளில் மேற்கொள்ளப்படவுள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் பங்குச் சந்தை மூலமான வருமானத்திற்கும் வரி அறவிடும் முறைமை உருவாக்கப்படலாம் என வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர் ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மா தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடான இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் லாபங்களுக்கு வரி விதிக்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் தற்போது வரி விதிக்கப்படாத ஒரே ஒரு வருமானமாக பங்குச் சந்தை மாத்திரமே காணப்படுகின்றது.

இதனால் பங்குச் சந்தை ஊடாக வருமானம் ஈட்டும் அதிகமானோர் வரி செலுத்தாமல் தப்பித்துக்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்தின் வரிச் சுமை அதிகரிக்கும் பட்சத்தில், இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்று பங்குச் சந்தைக்கும் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். அவ்வாறு பங்குச் சந்தையில் வரி மாற்றங்கள் கொண்டு வரப்படுமாக இருந்தால், அது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவிலான வருமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related recommendation
Hiru TV News | Programmes