எல் நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நீர் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், உரிய பதிலளிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழமையாகவே உலர்ந்த காலநிலை நிலவுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த வருடம் வறட்சி நிலை தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
இதேவேளை செப்டெம்பர் மாத மத்திய பகுதியில் வடகீழ் பருவமழை ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த மாதத்தில் மழைவீழ்ச்சி வழமையை விடக் குறைவாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் மின்சாரத் சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கமைவாக அனைத்து நிறுவனங்களும் தமது பதிலளிப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த திட்டங்கள் எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி மீண்டும் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
நீர் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், உரிய பதிலளிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழமையாகவே உலர்ந்த காலநிலை நிலவுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த வருடம் வறட்சி நிலை தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
இதேவேளை செப்டெம்பர் மாத மத்திய பகுதியில் வடகீழ் பருவமழை ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த மாதத்தில் மழைவீழ்ச்சி வழமையை விடக் குறைவாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் மின்சாரத் சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கமைவாக அனைத்து நிறுவனங்களும் தமது பதிலளிப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த திட்டங்கள் எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி மீண்டும் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
Latest News
சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு: ஜனாதிபதி
Local
09 July 2026
இலங்கையில் இன்று மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
09 July 2026
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்குத் தாக்கல்
Local
09 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
09 July 2026
எல் நினோ காலநிலை தாக்கம் - நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை
Local
09 July 2026
டெங்கு பரவல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு
Local
09 July 2026
அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்
Local
09 July 2026
ஓய்வூதியதாரர்களுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு தொடர் இன்று ஆரம்பம்
Local
09 July 2026
15 நோயாளிகளின் மரணங்களுக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: பெண் கைதிகள் இடமாற்றம்
Local
09 July 2026