வங்காள விரிகுடாவில் சுமார் 36 நாட்களாகத் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள், பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் (Cox's Bazar) மாவட்டத்தில் உள்ள மொஹேஷ்காலி (Moheshkhali) பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சோனாச்சர் (Sonarchar) அருகே வங்காள விரிகுடாவில் மிதந்து கொண்டிருந்த ஃபைபர் படகில் இருந்த இருவரையும், பங்களாதேஷ் கடற்றொழிலாளர்கள் குழு கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவதானித்துள்ளது.
இதனையடுத்து, உடனடியாக குறித்த இருவரையும் தங்களது படகுக்கு மாற்றிய அவர்கள், பங்களாதேஷின் மொஹேஷ்காலி கரைக்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த (51) என்பவரும், 30 வயதுடைய அவருடைய மகனும் என மொஹேஷ்காலி காவல்துறையின் தலைமை அதிகாரி முஜிபுர் ரஹ்மானை மேற்கோள்காட்டி பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்றொழிலுக்குச் சென்றபோது திசைமாறி, கடந்த 36 நாட்களாக உணவும் குடிநீரும் இன்றித் தவித்ததாகவும், பச்சை மீன்களைப் பிடித்து உண்டே தாங்கள் உயிர் பிழைத்ததாகவும் அவர்கள், தங்களை மீட்ட குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இவர்கள் கடலில் எவ்வாறு திசைமாறினார்கள், உண்மையிலேயே 36 நாட்கள் கடலில் இருந்தனரா என்பது குறித்தும், அவர்களின் அடையாளங்கள் குறித்தும் மொஹேஷ்காலி காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சோனாச்சர் (Sonarchar) அருகே வங்காள விரிகுடாவில் மிதந்து கொண்டிருந்த ஃபைபர் படகில் இருந்த இருவரையும், பங்களாதேஷ் கடற்றொழிலாளர்கள் குழு கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவதானித்துள்ளது.
இதனையடுத்து, உடனடியாக குறித்த இருவரையும் தங்களது படகுக்கு மாற்றிய அவர்கள், பங்களாதேஷின் மொஹேஷ்காலி கரைக்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த (51) என்பவரும், 30 வயதுடைய அவருடைய மகனும் என மொஹேஷ்காலி காவல்துறையின் தலைமை அதிகாரி முஜிபுர் ரஹ்மானை மேற்கோள்காட்டி பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்றொழிலுக்குச் சென்றபோது திசைமாறி, கடந்த 36 நாட்களாக உணவும் குடிநீரும் இன்றித் தவித்ததாகவும், பச்சை மீன்களைப் பிடித்து உண்டே தாங்கள் உயிர் பிழைத்ததாகவும் அவர்கள், தங்களை மீட்ட குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இவர்கள் கடலில் எவ்வாறு திசைமாறினார்கள், உண்மையிலேயே 36 நாட்கள் கடலில் இருந்தனரா என்பது குறித்தும், அவர்களின் அடையாளங்கள் குறித்தும் மொஹேஷ்காலி காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!
Local
25 July 2026
28 ஆவது அகவையில் சூரியன் எப் எம் : கொட்டகலையில் மரக்கன்று நாட்டும் நிகழ்வு
Local
25 July 2026
இந்தியாவில் கைதான இருவரையும் அழைத்துவர இலங்கை காவல்துறை விரைகிறது - வத்தளை சம்பவத்துடன் தொடர்பா?
Local
25 July 2026
போராட்டத்தைக் கைவிட்டது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
Local
25 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி - விஷ்மி, ஹர்ஷிதா சதமடித்து சாதனை!
Local
25 July 2026
ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தம் ரத்து: ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவிப்பு!
Local
25 July 2026
ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!
Local
25 July 2026
6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டுத் திரைப்படம் பார்க்கச் சென்ற இளம் தம்பதி கைது!
Local
25 July 2026
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா!
Local
25 July 2026
அமெரிக்காவில் வீடொன்றில் தீப்பரவல்: 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உடலங்களாக மீட்பு!
Local
25 July 2026