தனது தோல்விகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி ஒடுக்கும் வகையில் அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும், மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும், மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Latest News
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026