General09 August 2026

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளது!

நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 89,395 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 4,048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 29,973 ஆகும்.

இதேவேளை, நாட்டில் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நுளம்புகள் பெருகும் இடங்களைத் தொடர்ந்து அழித்ததன் மூலமே இந்நிலை சாத்தியமானதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக டெங்கு நோய் பரவலும் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும் தேங்கி நிற்கும் நீரின்றியும் வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes