General22 August 2026

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் நிதியுதவி வழங்கிவைப்பு

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் உயர்கல்வியைத் தொடர்வதற்கான செலவுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

விசேட தேவையுடைய மாணவர்கள் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதும், அவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அரச அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அதிகாரிகள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் நிதியுதவி பெற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes