General21 September 2019

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்து கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று நிராகரித்தார்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியான பாமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்தரகுப்த தேநுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் அறிக்கையிட்டு, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது

அமெரிக்க பிரஜையாக இருந்துகொண்டு, தேர்தல் சட்டம் மற்றும் பிரஜைகள் சட்டம் என்பனவற்றை மீறி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அவர்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

காவல்துறைமா அதிபருக்கு முதலாவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அவரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கையை பரீசீலனைக்கு உட்படுத்திய நீதவான், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் என்பனவற்றிடம், விசாரணைகளுக்கு அமைவான ஆவணங்களைப் பெற்று அந்த விடயங்களை மன்றுக்கு அறிக்கைப்படுத்தமாறு கூறியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes