2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கறுப்பு நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்ப்பு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜாவினால் அறிவிக்கப்பட்டது.
அவர்மீதான 18 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அமில பிரியங்கர அமர சிங்க என்ற இளைஞரை, தமது பாதுகாவலர்களை ஈடுபடுத்தி, கடத்திச் சென்றதுடன் அதற்கு ஆதரவு அளித்தக் குற்றச்சாட்டின் கீழ், ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பாதுகாவலர்கள் ஒப்புக்கொண்டனர்.
முதல் கட்டத்திலேயே அவ்வாறு குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவர்களுக்கு 12 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை உத்தரவைப் பிறப்பித்த மேல் நீதிமன்ற நீதிபதி 2 இலட்சத்து 85,000 ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறும் பணித்துள்ளார்.
Latest News
ஈரானிய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு
Local
19 July 2026
ட்ரம்ப்பின் பதிவுகளுக்கு இனி 100,000 அமெரிக்க டொலர் கட்டணம்!
Local
19 July 2026
அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பம் பெறுமதியற்றது: ஈரானின் உச்ச தலைவர் குற்றச்சாட்டு!
Local
19 July 2026
அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் காலநிலை!
Local
19 July 2026
களத்தில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் சக்கைப்போடு போடும் கால்பந்து நட்சத்திரங்கள்!
Local
19 July 2026
வடக்கின் குடும்ப விழா 2026 - வருடாந்த மகோற்சவத்தின் பூர்வாங்க கலந்துரையாடல்
Local
18 July 2026
உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி - வெற்றி யாருக்கு?
Local
18 July 2026
செம்மணியில் தொடரும் அகழ்வு: 36ஆவது நாளில் 6 புதிய என்புக்கூடுகள்!
Local
18 July 2026
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!
Local
18 July 2026
72 ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு - ராயன், அமரன், மெய்யழகன், மஹாராஜா படத்துக்கு விருதுகள்!
Local
18 July 2026