சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை தடுக்க, 'மெட்டா' நிறுவனம் தங்களின், 'வட்சப், பேஸ்புக்' தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள், 'டிஜிட்டல்' கைது என, பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன.
இந்த மோசடிகள் பெரும்பாலும், 'வட்சப், பேஸ்புக்' தளங்கள் மூலம் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த செயலிகளில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அதன் தாய் நிறுவனமான, 'மெட்டா' அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 'பேஸ்புக் மெசெஞ்சரில்' செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோசடியை கண்டறியும் அமைப்பு அறிமுகமாக உள்ளது.
குறித்த அமைப்பு புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் தொடர்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் என கூறப்படுகிறது.
அதேபோன்று 'வட்சப்பில் அறிமுகம் இல்லாத நபர்களுடன், காணொளி உரையாடலில் ஈடுபடும் போது , தொலைபேசி திரையை பகிரும் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி காட்டப்படும் என குறிப்பிடப்படுகிறது.
இது இணைய மோசடி கும்பல் வங்கி விபரங்கள் அல்லது ஒருதடவை மாத்திரம் பயன்படுத்தும் கடவுசீட்டு எண்களை திருட பயன்படுத்தும் வழிமுறை என குறிப்பிடப்படுகின்றது.
Latest News
இங்கிலாந்து அணியுடன் தொடர் தோல்வி: இலங்கை அணியின் பலவீனங்களை உடைத்த சங்கக்கார!
Local
18 September 2026
நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு!
Local
18 September 2026
உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!
Local
18 September 2026
திலித் ஜயவீரவின் எழுத்தாணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதி
Local
18 September 2026
எல் நினோவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கை கொடுக்குமா அரசாங்கம்? – தொழில் பிரதி அமைச்சர் விளக்கம்!
Local
18 September 2026
ஈராண்டு நிறைவைக் கொண்டாடும் தேசிய மக்கள் சக்தி - அக்குரஸ்ஸவில் மாபெரும் மக்கள் பேரணி!
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
Local
18 September 2026
சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய குடிவரவு திணைக்கள அதிகாரி கைது
Local
18 September 2026
30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த அபிஷேக் சர்மா
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Local
18 September 2026