நாட்டின் பல பாகங்களில் நிலவும் அதிதீவிர காலநிலை காரணமாக அத்தியாவசியமற்ற மற்றும் ஆபத்தான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிக்கோ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (29) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இராணுவத் தளபதி இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
"மோசமான காலநிலை காரணமாகப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிருங்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடியது என்பதை உணர்ந்து செயற்படுங்கள்." எனத் தெரிவித்தார்.
"நீங்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதால் உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், அந்த உயிர்களைக் காப்பாற்ற வரும் இராணுவம், கடற்படை, விமானப்படைப் பணியாளர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள்.
எனவே, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்." எனக் குறிப்பிட்டார்.
"அரசால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டால், தயவுசெய்து அந்த இடத்திலிருந்து வெளியேறுங்கள். அவ்வாறு குறிப்பிடப்படுவது ஒரு அனர்த்தம் ஏற்படலாம் என்பதனாலேயே" எனவும் சுட்டிக்காட்டினார்.
இராணுவத் தளபதி இந்த வழிகாட்டல்கள் மூலம், மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தினார்.
Latest News
ரன்வீர் - தீபிகா வீட்டிற்கு வந்த இரண்டாவது குட்டி இளவரசி!
Local
20 September 2026
வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளுக்கானவர் இல்லை: முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் : கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?
Local
20 September 2026
AI துறையை அழிக்க சதி? எதிர்த்தரப்பை வீழ்த்த 'AI FORCE' அமைப்பு உருவாக்கம் - ட்ரம்ப் அறிவிப்பு!
Local
20 September 2026
சர்வதேச சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை!
Local
20 September 2026
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி!
Local
20 September 2026
நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி காலமானார்!
Local
20 September 2026
கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!
Local
20 September 2026
மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகங்கள்!
Local
20 September 2026