நாட்டின் பல பாகங்களில் நிலவும் அதிதீவிர காலநிலை காரணமாக அத்தியாவசியமற்ற மற்றும் ஆபத்தான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிக்கோ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (29) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இராணுவத் தளபதி இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
"மோசமான காலநிலை காரணமாகப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிருங்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடியது என்பதை உணர்ந்து செயற்படுங்கள்." எனத் தெரிவித்தார்.
"நீங்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதால் உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், அந்த உயிர்களைக் காப்பாற்ற வரும் இராணுவம், கடற்படை, விமானப்படைப் பணியாளர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள்.
எனவே, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்." எனக் குறிப்பிட்டார்.
"அரசால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டால், தயவுசெய்து அந்த இடத்திலிருந்து வெளியேறுங்கள். அவ்வாறு குறிப்பிடப்படுவது ஒரு அனர்த்தம் ஏற்படலாம் என்பதனாலேயே" எனவும் சுட்டிக்காட்டினார்.
இராணுவத் தளபதி இந்த வழிகாட்டல்கள் மூலம், மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தினார்.
Latest News
இங்கிலாந்து எதிர் இலங்கை இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி களத்தடுப்பு தேர்வு!
Local
17 September 2026
ஒன்லைன் மூலம் தொடருந்து பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி அறிமுகம்
Local
17 September 2026
மாலபே பகுதியில் துப்பாக்கி ரவைகள், கைவிலங்கு மீட்பு
Local
17 September 2026
100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல் - வர்த்தகருக்கு மரண தண்டனை
Local
17 September 2026
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
Local
17 September 2026
2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்க தோனிக்கு உத்தரவு
Local
17 September 2026
"வாழ்க தமிழ், வளர்க தமிழ்!" - சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்ற சீன மாணவியின் நெகிழ்ச்சி!
Local
17 September 2026
தெமட்டகொடவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு
Local
17 September 2026
புசல்லாவையில் தொடரும் சோகம் - ஒரே நாளில் 2 தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு!
Local
17 September 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல்
Local
17 September 2026