General04 December 2025

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் வழக்கமான கட்டண முறைமை

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
நிலவிய மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னர் தீர்மானித்திருந்தது. 
 
எனினும் தற்போது வெள்ள நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாலும், பல வீதிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாலும், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes