தென் அமெரிக்க நாடான வெனிசுவேலா மீது அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று அதிகாலை தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கப் படைகள் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தின.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த இரகசிய நடவடிக்கை குறித்த கூடுதல் விபரங்களை வழங்க, இன்று புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வெனிசுவேலா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரில் பல இடங்களில் தீப்பரவலும் புகையும் காணமுடிவதாக தெரிவித்துள்ளது.
வெனிசுவேலா அரசாங்கம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு" என வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், நாடு தழுவிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் மதுரோவைத் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்தப் பத்தாண்டு காலப் பதற்றம் தற்போது இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளது.
அண்டை நாடான கொலம்பியா மற்றும் கியூபா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
1990களில் பனாமா ஜனாதிபதி கைது செய்யப்பட்டதற்குப் பிறகு, ஒரு நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவால் இவ்வாறாகச் சிறைபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இன்று அதிகாலை தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கப் படைகள் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தின.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த இரகசிய நடவடிக்கை குறித்த கூடுதல் விபரங்களை வழங்க, இன்று புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வெனிசுவேலா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரில் பல இடங்களில் தீப்பரவலும் புகையும் காணமுடிவதாக தெரிவித்துள்ளது.
வெனிசுவேலா அரசாங்கம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு" என வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், நாடு தழுவிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் மதுரோவைத் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்தப் பத்தாண்டு காலப் பதற்றம் தற்போது இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளது.
அண்டை நாடான கொலம்பியா மற்றும் கியூபா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
1990களில் பனாமா ஜனாதிபதி கைது செய்யப்பட்டதற்குப் பிறகு, ஒரு நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவால் இவ்வாறாகச் சிறைபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Latest News
ஃபிஃபா தொடர்களை புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தீர்மானம்!
Local
30 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: தேசிய பாதுகாப்பை கருதி சாட்சிய விவரங்களை வெளியிடத் தடை
Local
30 July 2026
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை – ஆபத்தில் இலட்சக்கணக்கான மக்கள்
Local
30 July 2026
மதுபான விலை உயர்வுக்கு மத்தியிலும் மதுவரி வருவாய் அதிகரிப்பு
Local
30 July 2026
குற்றங்களை கண்டறிந்த காவல் நாய்களுக்கு புதிய உரிமையாளராகும் வாய்ப்பு
Local
30 July 2026
நடிகர் கவின் வீட்டில் இரட்டை மகிழ்ச்சி : திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து!
Local
30 July 2026
ஒரு தந்தையாக என் கடமை... : மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி செய்தி!
Local
30 July 2026
ஹரக் கட்டா உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புச் சட்ட கீழான வழக்கை முன்னகர்த்த முடியாது – நீதிமன்றம் உத்தரவு
Local
30 July 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமனம்!
Local
30 July 2026
நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
30 July 2026