General09 April 2026

அமெரிக்கா - நேட்டோ மோதல்? - அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

நேட்டோ (NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தியில் இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.


வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் மார்க் ரூட்டே ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற மூடிய அறை சந்திப்பினைத் தொடர்ந்து, ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்ததாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்களுக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ எங்களோடு இருக்கவில்லை, இனி தேவைப்படும்போதும் அவர்கள் இருக்கப்போவதில்லை" என ட்ரம்ப் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

மேலும், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க தான் எடுத்த முயற்சியை நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் எதிர்த்ததை அவர் மீண்டும் நினைவுபடுத்தியதுடன், கிரீன்லாந்தை மோசமாக நிர்வகிக்கப்படும் ஒரு பனிக்கட்டி என அவர் சாடியுள்ளார்.

இதையும் வாசிக்க..

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புதல்


ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அண்மைய தாக்குதல்கள் உலகை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப்புடனான சந்திப்பு மிகவும் வெளிப்படையானதாக அமைந்தது எனவும், அமெரிக்க அதிபர் சில நேட்டோ நாடுகள் மீது தெளிவாக ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பதையும் மார்க் ரூட்டே ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால உறவுகள் குறித்து சர்வதேச மட்டத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இதையும் பார்க்க

 

Related recommendation
Hiru TV News | Programmes