ஈரானின் போர் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அந்த நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையிடமே (Supreme National Security Council) உள்ளது என ஈரானிய நீதி அமைச்சர் அமீன் ரஹீமி தெரிவித்துள்ளார்.
தஸ்நிம் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
போர் அல்லது பேச்சுவார்த்தை போன்ற முக்கியமான விடயங்களில், நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு உச்ச தேசிய பாதுகாப்புச் சபையே இறுதி முடிவுகளை எடுக்கிறது.
பாதுகாப்புச் சபையினால் எடுக்கப்படும் தீர்மானங்கள், ஈரானின் உச்ச தலைவரின் (Supreme Leader) ஒப்புதலுக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதனால் நாட்டில் ஒருமித்த மற்றும் தெளிவான அணுகுமுறை பின்பற்றப்படுவதாக ரஹீமி சுட்டிக்காட்டினார்.
தற்காப்புத் துறையாக இருந்தாலும் அல்லது பேச்சுவார்த்தைக் களமாக இருந்தாலும், ஈரானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே முதன்மையான இலக்காகும்.
இதில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் இராணுவம் தனது 'பொறுமை இழந்து வருவதாக' வெளியான செய்திகளின் மத்தியில், அரசாங்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் பாதுகாப்புச் சபையின் பின்னால் உறுதியாக நிற்கின்றன என்பதை நீதி அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
Latest News
இக்கட்டான நிலையில் மும்பை - Play Off செல்ல வாய்ப்புள்ளதா?
Local
30 April 2026
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
Local
30 April 2026
ஈரானின் போர் குறித்த தீர்மானங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
Local
30 April 2026
வானூர்தி நிலையத்தில் அவமதிப்பு? FIFA மாநாட்டைப் புறக்கணித்த ஈரான்
Local
30 April 2026
ஈரானின் 80% ஏவுகணை நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
30 April 2026
ஹைதராபாத் அதிரடி - மும்பைக்கு அதிர்ச்சித் தோல்வி!
Local
30 April 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
புடின் - ட்ரம்ப் இடையே திடீர் கலந்துரையாடல்
Local
29 April 2026
கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!
Local
29 April 2026
மராட்டியத்தில் தகிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்திற்கு 109 பேர் உயிரிழப்பு - 3 இலட்சம் பேர் சிகிச்சை!
Local
29 April 2026