கையடக்கத் தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக, இவ்வருட இறுதிக்குள் புதிய சுயாதீன ஒழுங்குமுறை முறைமையொன்றை நிறுவ இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தீர்மானித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகளில் மாற்றங்களைச் செய்து, நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் தெரிவிக்கையில்,
தற்போது தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் அதன் தரம் குறித்த தரவுகளைப் பெறுவதற்கு, சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் தகவல்களையே ஆணைக்குழு முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய முறைமையின் ஊடாக, சேவை வழங்குநர்களின் தரவுகளுக்கு அப்பால், ஆணைக்குழு நேரடியாகவும் சுயாதீனமாகவும் சேவையின் தரத்தைக் கண்காணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் நாடு முழுவதும் முறையான தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் (Internet Connectivity) சென்றடைவதை உறுதி செய்தல்,சிக்னல் குறைபாடுகள் மற்றும் இணைய வேகக் குறைபாடுகளைச் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல், சேவை வழங்குநர்களின் தரவுகளுக்குப் பதிலாக ஆணைக்குழுவின் நேரடித் தரவுகளின் அடிப்படையில் சேவையின் தரம் மதிப்பீடு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டுக்குள் இந்த வேலைத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு முறைகளில் மாற்றங்களைச் செய்து, நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் தெரிவிக்கையில்,
தற்போது தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் அதன் தரம் குறித்த தரவுகளைப் பெறுவதற்கு, சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் தகவல்களையே ஆணைக்குழு முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய முறைமையின் ஊடாக, சேவை வழங்குநர்களின் தரவுகளுக்கு அப்பால், ஆணைக்குழு நேரடியாகவும் சுயாதீனமாகவும் சேவையின் தரத்தைக் கண்காணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் நாடு முழுவதும் முறையான தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் (Internet Connectivity) சென்றடைவதை உறுதி செய்தல்,சிக்னல் குறைபாடுகள் மற்றும் இணைய வேகக் குறைபாடுகளைச் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல், சேவை வழங்குநர்களின் தரவுகளுக்குப் பதிலாக ஆணைக்குழுவின் நேரடித் தரவுகளின் அடிப்படையில் சேவையின் தரம் மதிப்பீடு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டுக்குள் இந்த வேலைத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
இன்று தங்கத்தின் விலை குறைந்தது : நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
வீடமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
Local
30 April 2026
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்
Local
30 April 2026
ஆடம்பர வாழ்க்கைக்காக மகனுக்குப் புற்றுநோய் என நாடகம் : தாய்க்கு கிடைத்த தண்டனை!
Local
30 April 2026
பிக்மி, ஊபர் ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகை?
Local
30 April 2026
இலங்கையின் நகர்ப்புற மக்களில் 30 வீதமானோருக்கு 'கொழுப்பு கல்லீரல்' பாதிப்பு : மருத்துவர்கள் எச்சரிக்கை!
Local
30 April 2026
குமார் சங்கக்காரவின் கவனத்தை ஈர்த்த அந்த வீரர் - பஞ்சாப்பை பதறவைத்த ராஜஸ்தான்!
Local
30 April 2026
மீண்டும் எகிறும் எண்ணெய் விலை: உலக சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
Local
30 April 2026
தொலைத்தொடர்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்த புதிய சுயாதீன ஒழுங்குமுறை கட்டமைப்பு
Local
30 April 2026
யாழ்-அநுராதபுரம் தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
Local
30 April 2026