International01 May 2026

லெபனானில் இஸ்ரேலின் கோரத் தாண்டவம்!" – ஒரே நாளில் 28 பேர் பலி!

லெபனானின் நபதியா மாவட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், லெபனான் இராணுவத்தைச் சேர்ந்த வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை லெபனான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இது ஒரு குடியிருப்பு மீதான நேரடித் தாக்குதல் என்று லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினத்தில் மாத்திரம் தென் லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில் 28 பேர் வரை கொல்லப்பட்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes