General05 May 2026

எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்

எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

எண்ணெய் முனையமான புஜைரா (Fujairah) துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, நேற்று மாலை 5:00 மணிக்குப் பிறகு ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 115 டொலரை கடந்தது.

இது அன்றைய தினத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியாகும்.

இது ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்குக் கடற்கரையில், ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அப்பால் அமைந்துள்ளது.

அபுதாபி எண்ணெய் வயல்களில் இருந்து புஜைராவுக்கு குழாய் மூலம் எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அளவு மசகு எண்ணெயை கப்பல்களில் ஏற்றி சர்வதேச சந்தைகளுக்கு அனுப்ப முடிகிறது.

முன்னதாக, ஈரானின் இராணுவம் அமெரிக்காவின் போர்க்கப்பலைத் தாக்கியதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலை 114 டொலரை எட்டியது.

எனினும், அமெரிக்கக் கப்பல்கள் தாக்கப்படவில்லை என அந்நாடு தெரிவித்ததையடுத்து, மசகு எண்ணெய் விலை மீண்டும் குறைந்தது.
Related recommendation
Hiru TV News | Programmes