General04 June 2026

யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (04) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக பிரதிவாதி தரப்பினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுவொன்று தற்போது நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக, மேல் நீதிமன்றத்தில் இடம்பெறும் சாட்சிய விசாரணைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரச தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரை வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானித்தார்.

இதற்கமைய, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது
Related recommendation
Hiru TV News | Programmes