திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது பானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சிற்றூந்து ஓட்டுநரைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது, தோழியின் தாயார் வெளியூர் செல்வதற்காக வாடகைக்கு சிற்றூந்து ஒன்றை வரவழைத்துள்ளார்.
குறித்த சிற்றூந்தின் ஓட்டுநர் , சிறுமியிடம் நயமாகப் பேசி அவரைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்குக் கட்டாயப்படுத்தி மது ஊட்டி கொடுத்து, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி சுயநினைவின்றி மதுபோதையில் கீரைக்கடை பகுதியில் விழுந்து கிடந்துள்ளார். அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட சிறுமி, தற்போது மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், சிற்றூந்து ஓட்டுநரை தேடிப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Latest News
அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க தேசிய வேலைத்திட்டம்
Local
04 June 2026
"என் இசைக்கான குரல்" - எஸ்.பி.பியின் 80ஆவது பிறந்தநாளில் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பதிவு!
Local
04 June 2026
கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் சென்ற நடிகர் : சமூக வலைத்தளங்களில் வலுக்கும் விமர்சனங்கள்
Local
04 June 2026
அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வீழ்ச்சி
Local
04 June 2026
விண்வெளி வேட்டைக்குத் தயாராகும் நாசாவின் புதிய தொலைநோக்கி : 1,00,000 புதிய கிரகங்களைக் கண்டறிய இலக்கு!
Local
04 June 2026
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
Local
04 June 2026
14 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை: சிற்றூந்து ஓட்டுநர் கைது
Local
04 June 2026
யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Local
04 June 2026
நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!
Local
04 June 2026
ஐபோன் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : இந்த மொடல்களுக்கு இனி iOS 27 அப்டேட் கிடைக்காது!
Local
04 June 2026