தமிழ்த் தேசிய எழுச்சிப் பாடல்களைப் பாடி இளைஞர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பாடகர் சங்கீத்சன், இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமிழக அமைச்சர் வன்னி அரசு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
"தமிழீழத்தின் நம்பிக்கைக்குரிய ராப் பாடகரான சங்கீத்சன், தனது பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து வருகிறார்.
முள்ளிவாய்க்கால் மண்ணின் தியாகத்தில் இருந்து உதித்த உணர்வலைகளின் அடையாளமாக விளங்கும் இவரை, சிங்கள பேரினவாத அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரிய அரச பயங்கரவாதச் செயலாகும்.
இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக உலக அரங்கில் கூறிவரும் அநுர குமார திஸாநாயக தலைமையிலான அரசாங்கம், உண்மையில் இனப்படுகொலை செய்த ராஜபக்ஷவின் பாணியையே பின்பற்றி வருகிறது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
தமிழீழ இளைஞர்களின் விடுதலைக் குரலை ஒடுக்குவதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒரு கருவியாக இலங்கை அரசு பயன்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் மாறவில்லை என்பதற்கு பாடகர் சங்கீத்சனின் கைது ஒரு சாட்சியமாகும்.
எனவே, தமிழீழ உணர்வோடு எழுச்சிப் பாடல்களைப் பாடி வரும் தம்பி சங்கீத்சனை யாழ் சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமிழக அமைச்சர் வன்னி அரசு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
"தமிழீழத்தின் நம்பிக்கைக்குரிய ராப் பாடகரான சங்கீத்சன், தனது பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து வருகிறார்.
முள்ளிவாய்க்கால் மண்ணின் தியாகத்தில் இருந்து உதித்த உணர்வலைகளின் அடையாளமாக விளங்கும் இவரை, சிங்கள பேரினவாத அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரிய அரச பயங்கரவாதச் செயலாகும்.
இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக உலக அரங்கில் கூறிவரும் அநுர குமார திஸாநாயக தலைமையிலான அரசாங்கம், உண்மையில் இனப்படுகொலை செய்த ராஜபக்ஷவின் பாணியையே பின்பற்றி வருகிறது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
தமிழீழ இளைஞர்களின் விடுதலைக் குரலை ஒடுக்குவதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒரு கருவியாக இலங்கை அரசு பயன்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் மாறவில்லை என்பதற்கு பாடகர் சங்கீத்சனின் கைது ஒரு சாட்சியமாகும்.
எனவே, தமிழீழ உணர்வோடு எழுச்சிப் பாடல்களைப் பாடி வரும் தம்பி சங்கீத்சனை யாழ் சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
Latest News
"வெளியே எழும் விமர்சனங்களை புறந்தள்ளி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" - சூரியவன்ஷிக்கு அநுர தென்னகோன் அறிவுரை!
Local
16 June 2026
300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொழும்பு துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டுவர முடியும்
Local
16 June 2026
நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Local
16 June 2026
நாட்டில் வேகமாகப் பரவும் டெங்கு: அதி அபாய வலயங்கள் 84 ஆக அதிகரிப்பு!
Local
16 June 2026
முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று
Local
16 June 2026
வித்யா கொலை வழக்கு: மூவரின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது யாழ் மேல் நீதிமன்றம்!
Local
16 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை
Local
16 June 2026
ஈரான்- நியூசிலாந்து ஆட்டம் 2-2 என சமநிலையில் நிறைவு
Local
16 June 2026
தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!
Local
15 June 2026
மட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு: சி.ஐ.டி விபரம் சமர்ப்பிப்பு
Local
15 June 2026