தேர்தல்களை ஒத்திவைக்கும் கலாசாரத்தைக் கொண்ட தரப்பினர் இன்று சிஸ்டம் சேஞ் பற்றிப் பேசுவது நல்லதொரு அறிகுறி என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த பதிலை வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,
கடந்த தேர்தலில் 53 லட்சம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர்கள் நாட்டுக்குச் செய்த பொருளாதார பங்களிப்புகளையும், மின்சார உற்பத்தித் திட்டங்களையும் பட்டியலிட்ட அவர், அரசாங்கம் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
இதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் இரண்டு முக்கிய தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளதை நினைவூட்டினார்.
"தேர்தல்களை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சில சட்டப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இது குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதும் சட்டபூர்வமாகவும், ஜனநாயக ரீதியாகவும் மட்டுமே செயல்படுவோம்.
ஜனநாயகம் என்ற பெயரை எமக்குத் தேவையானவாறு மாற்றி, லாபம் ஈட்ட நாம் முனையவில்லை" எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
இது குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதும் சட்டபூர்வமாகவும், ஜனநாயக ரீதியாகவும் மட்டுமே செயல்படுவோம்.
ஜனநாயகம் என்ற பெயரை எமக்குத் தேவையானவாறு மாற்றி, லாபம் ஈட்ட நாம் முனையவில்லை" எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
" செய்ததாகக் கூறும் திட்டங்கள் அனைத்தும் அவ்வளவு வெற்றிகரமாக அமைந்திருந்தால், கடந்த இரண்டு தேர்தல்களில் மக்கள் ஏன் அவர்களது 'சிஸ்டத்தை' தோற்கடித்தார்கள்? அவர்கள் செய்தவற்றின் தோல்வியை மக்கள் உணர்ந்ததாலேயே எங்களது புதிய சிஸ்டத்தை மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பின் மூலமே இதற்கான பதில் கிடைத்துவிட்டது" என பிரதமர் தெரிவித்தார்.
Latest News
இந்திய வானூர்திப்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்
Local
13 June 2026
குலம் சார்ந்த அரசியல் இன்றி சுரேஷ் சலேவுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
13 June 2026
"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Local
13 June 2026