General10 June 2026

கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள பல கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இதன் காரணமாக, கடற்றொழிலாளர்களை தொழிலுக்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes