நாட்டில் தற்போது நிலவும் கடுமையான டொலர் தட்டுப்பாடு மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாடு மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்றுமதியாளர்கள் தங்களது டொலர் வருமானத்தை ரூபாயாக மாற்றுவதற்கான கால அவகாசத்தை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக அரசாங்கம் திடீரெனக் குறைத்துள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) கடிதம் எழுதிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை தளர்த்துவதற்காக 90 நாட்கள் வரம்பு நீக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மூன்று வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், ஜனாதிபதி தற்போது ‘ரிவர்ஸ் கியரில்’ வந்து இதனை 30 நாட்களாகக் குறைத்துள்ளார். நாட்டில் டொலர் தட்டுப்பாடு இருப்பதனாலேயே அரசாங்கம் இந்த ‘கட்டாய மாற்றத்தை’ மேற்கொண்டுள்ளது.
சந்தையில் டொலர்கள் இல்லாத காரணத்தினால், அத்தியாவசியப் பொருட்களுக்கு மாத்திரமே கடன் கடிதங்களை திறக்குமாறு மத்திய வங்கி, வணிக வங்கிகளுக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவுறுத்தியுள்ளது.
சில வங்கிகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. சந்தை மீதான நம்பிக்கை உடைந்துள்ளதையே இது காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
சில வங்கிகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. சந்தை மீதான நம்பிக்கை உடைந்துள்ளதையே இது காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Latest News
2030ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி
Local
10 June 2026
இந்திய குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்திப்பு
Local
10 June 2026
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
Local
10 June 2026
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு
Local
10 June 2026
ஹஜ் யாத்திரையில் அடிப்படை வசதிகள் இல்லை – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டு
Local
10 June 2026
குடிநீர் போத்தல்களுக்கான விலை அதிகரிப்பு
Local
10 June 2026
நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்கிறதா? டொலர் தட்டுப்பாடு குறித்து முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை!
Local
10 June 2026
காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்
Local
10 June 2026
கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
Local
10 June 2026
மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு
Local
10 June 2026