அமெரிக்காவுடனான சாத்தியமான உடன்படிக்கை குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளில் தனது "சிவப்பு கோடுகளை" (Red Lines) ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளது.
உடன்படிக்கை கையெழுத்தாகும் நேரம் மற்றும் இடம் குறித்து வௌியாகும் தகவல்கள் யாவும் வெறும் ஊகங்கள் மட்டுமே என்றும், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை உரையின் பெரும்பகுதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்ட போதிலும், பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து பலமுறை மாற்றிக் கொண்டதே தற்போதைய இழுபறிக்கு முக்கிய காரணம் என்று இஸ்மாயில் பாகேய் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர் நிறுத்தம் மற்றும் உடன்படிக்கை குறித்துப் பேசி வரும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ மறுப்பு வௌியாகியுள்ளது என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Local
12 June 2026
உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!
Local
12 June 2026
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
Local
12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!
Local
12 June 2026
புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்
Local
12 June 2026
எல் நினோ தாக்கத்திலும் தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை
Local
12 June 2026
குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு - நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
12 June 2026
மின்னல் தாக்கத்திற்குள்ளான ஶ்ரீலங்கன் வானூர்தி கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்!
Local
12 June 2026
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
12 June 2026
4 முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Local
12 June 2026