கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு 19 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்தனகல்ல மற்றும் கரஸ்நாகல ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி இன்று (16) காலை 8.00 மணி முதல் நாளை (17) காலை 3.00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை, கம்பஹா, மஹர, அத்தனகல்ல மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளான அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத, வெலிவேரிய, பலும்மஹர மற்றும் ரதுபஸ்வல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
மேலும், கம்பஹா மாநகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Latest News
சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா? மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து விசாரணை!
Local
16 June 2026
காலி முதல் பொத்துவில் வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும்: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
Local
16 June 2026
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கம்
Local
16 June 2026
இந்தியாவில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்குத் தடை: கல்வி அமைச்சு
Local
16 June 2026
338 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலரின் விற்பனை விலை!
Local
16 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை அதிகரிப்பு
Local
16 June 2026
புளுமெண்டல் சங்க உள்ளிட்ட இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!
Local
16 June 2026
"வெளியே எழும் விமர்சனங்களை புறந்தள்ளி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" - சூரியவன்ஷிக்கு அநுர தென்னகோன் அறிவுரை!
Local
16 June 2026
300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொழும்பு துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டுவர முடியும்
Local
16 June 2026
நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Local
16 June 2026